ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் டோக்கன் பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. மாலை நேரத்தில் தனுஷ்கோடி கடல் அருகே ஏராளமான படகுகள் மீன் பிடித்துக் கொண்டிருந்தன. அப்போது ஐந்துக்கும் மேற்பட்ட அதிவேக ரோந்துப்படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை அங்கிருந்து விரட்டியுள்ளனர். மேலும், இரண்டு விசைப்படகுகளை சிறை பிடித்த கடற்படையினர் அதிலிருந்து 15 மீனவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர், 2 விசைப்படகுகளையும் கைப்பற்றியதோடு, அதிலிருந்து 15 மீனவர்களையும் சிறைப்பிடித்து தலைமன்னார் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். இதனால் ராமேஸ்வரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம் appeared first on Dinakaran.

Related Stories: