கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி அன்று வியாசர்பாடி அருகே பெங்களுர் விரைவு வண்டி சிக்னலுக்காக நின்ற சமயம், அடையாளம் தெரியாத திருநங்கைகள் 2 பேர் ஒரு பயணியின் பாக்கெட்டில் இருந்து ரூ.15 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு இறங்கி ஓடியுள்ளனர். அதேபோன்று, கடந்த ஏப்ரல் 29ம் தேதி ஜார்கண்டில் இருந்து பெரம்பூருக்கு வந்த விரைவு வண்டியில் மருத்துவ சிகிச்சைக்காக வந்த ஒரு பயணியிடம் ரூ.15 ஆயிரம் காணாமல் போனது சம்மந்தமாக விசாரணை செய்தனர். அப்போது, பணம் ரயிலில் கிடைத்ததாக திருநங்கைகள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இருப்பினும், தொடர்ந்து புகார்கள் வந்ததையடுத்து இருப்புப் பாதை காவல் துறை கூடுதல் இயக்குனர் வனிதா உத்தரவின்படி சென்னை எஸ்.பி. பொன்ராமு திருநங்கைகளின் சங்க நிர்வாகிகள் ஜெயா, சுதா மற்றும் சகிதா ஆகியோரை அழைத்துப்பேசி அவர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கினார். மேலும், அவர்களின் சங்க உறுப்பினர்களுக்கும் தக்க அறிவுரைகள் வழங்கினார். இனிவரும் காலங்களில் இதுபோன்ற புகார்கள் ஏதும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து புகார்கள் வரும் பட்சத்தில் அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து அனுப்பினர்.
The post ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக புகார் appeared first on Dinakaran.