உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களை நினைவுகூர்ந்து, பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: 2019-ம் ஆண்டு புல்வாமா தாக்குதலில் நாம் இழந்த துணிச்சலான வீரர்களுக்கு மரியாதையையும் அஞ்சலியையும் செலுத்துகிறேன். அவர்களின் தியாகத்தையும் தேசத்திற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் வருங்கால தலைமுறையினர் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
The post தியாகத்தை வருங்கால தலைமுறையினர் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்: புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி appeared first on Dinakaran.