மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு: அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு

காஞ்சிபுரம்: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து துறை அலுவலர்களுக்கு கலெக்டர் கலைச்செல்வி மோகன் உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மையம் கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 278 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அந்த வகையில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கலெக்டர் கலைச்செல்வி மோகன், பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு: அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: