இதே போல் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியில் பெண் டாக்டர் ஒருவரை தொல்லை செய்ததாக, சீனியர் டாக்டர் ஆன்டணி சுரேஷ்சிங் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் பொறியியல் கல்லூரியில் மாணவிக்கு தொல்லை கொடுத்ததாக பேராசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்: சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்த பெரியவடகம்பட்டி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சின்னராசு (59). இவர் பள்ளி இறைவணக்கத்தின் போது மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். புகாரின்படி போலீசார் வழக்குபதிந்த நிலையில், தலைமை ஆசிரியர் தலைமறைவானார். இந்த விவகாரம் குறித்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் ராஜூ விசாரணை நடத்தி, தலைமை ஆசிரியர் சின்னராசுவை சஸ்பெண்ட் செய்தார்.
The post கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை பி.டி.ஆசிரியர் கைது appeared first on Dinakaran.