இந்த ‘டிஎஸ்- சாட்’ என்ற பிரதான செயற்கைக்கோளை டிஎஸ்டிஏ (சிங்கப்பூர் அரசு) மற்றும் எஸ்.டி., இன்ஜினியரிங் இடையேயான கூட்டாண்மையின் கீழ் உருவாக்கப்பட்டது. இந்த செயற்கைக்கோள் உடன் 6 செயற்கைக்கோள் இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட்டு விண்ணுக்கு ஏவப்படுகிறது. 23 கிலோ எடை கொண்ட ‘விகிலேக்ஸ்- ஏஎம்’ என்ற தொழில்நுட்ப விளக்க மைக்ரோ செயற்கைக்கோள், ‘ஆர்கேட்’ என்ற வளிமண்டல இணைப்பு மற்றும் இயக்கவியல் செயற்கைக்கோள், ‘எக்ஸ்ப்ளோரர்’ என்ற ஒரு சோதனை செயற்கைக்கோள், ‘ஸ்கூப்-2’ என்ற 3யு நானோ செயற்கைக்கோள், கலாசியா-2 என்ற மற்றொரு 3யு நானோ செயற்கைக்கோள் மற்றும் ஓஆர்பி-12 ஸ்ட்ரைடர் செயற்கைக்கோள் ஆகிய 6 செயற்கைக்கோள் ஏவப்படுகிறது. இந்த ‘டிஎஸ்- சாட்’ செயற்கைக்கோள் ‘இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ்’ (ஐ.ஏ.ஐ) உருவாக்கிய செயற்கை துளை ரேடார் கருவியை கொண்டுள்ளது. எனவே அனைத்து வானிலை தகவல்களையும், துல்லியமான படங்களையும் வழங்கும்.இந்த ‘பி.எஸ்.எல்.வி. சி-56’ ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில், அதற்கான 25. 30 மணி நேர கவுண்ட் டவுன் இன்று காலை 5 மணிக்கு தொடங்கி உள்ளது.
The post 7 செயற்கைகோள்களுடன் ‘பி.எஸ்.எல்.வி. சி-56’ ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதற்கான கவுண்ட் டவுன் தொடங்கியது!! appeared first on Dinakaran.