கவர்னர் ரவியின் திடீர் டெல்லி பயணத்திற்கான காரணம் என்ன என்பது பற்றி, அதிகாரபூர்வமான தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. கவர்னரின் டெல்லி பயணம், அவரது தனிப்பட்ட சொந்தப் பயணம் என்று கூறப்படுகிறது.
ஆனாலும் தமிழ்நாட்டில் நீட் தேர்வு உட்பட பல்வேறு பிரச்னைகள் காரணமாக, கவர்னருக்கு எதிர்ப்பாக தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதோடு தமிழ்நாட்டின் ஓய்வு பெற்ற டிஜிபி சைலேந்திர பாபுக்கு புதிய பதவி அளிக்கும் கோப்பில், கவர்னர் கையெழுத்திட மறுத்து, தமிழ்நாடு அரசுக்கே கோப்புகளை திருப்பி அனுப்பினார். ஆனால் தமிழ்நாடு அரசு, கவர்னர் கேட்ட விளக்கங்களுக்கு தகுந்த பதிலுடன், மீண்டும் அந்த கோப்புகளை கவர்னருக்கு அனுப்பி உள்ளது. இதைப் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே, கவர்னரின் திடீர் டெல்லி பயணம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post தனக்கு எதிராக போராட்டங்கள் நடக்கும் சூழலில் கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம் appeared first on Dinakaran.