சொத்து வழிகாட்டி மதிப்பை மாற்றி அமைத்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்துசெய்த உத்தரவுக்கு தடை

சென்னை: சொத்து வழிகாட்டி மதிப்பை மாற்றி அமைத்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தமிழ்நாட்டில் சொத்துகளின் விலை அதிகரித்துள்ளதால் வழிகாட்டி மதிப்பீட்டை 2023-24-ல் அதிகரிக்க அரசு முடிவு செய்தது. வழிகாட்டி மதிப்பை மாற்றி அமைத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை பிறப்பித்திருந்தது. சுற்றறிக்கையை எதிர்த்து கிரெடாய் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் ரத்துசெய்து உத்தரவிட்டிருந்தது. சுற்றறிக்கை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. தமிழ்நாடு அரசு வழக்கில் 4 வாரத்தில் கிரெடாய் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

The post சொத்து வழிகாட்டி மதிப்பை மாற்றி அமைத்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்துசெய்த உத்தரவுக்கு தடை appeared first on Dinakaran.

Related Stories: