வழக்கில் 46 சாட்சிகள், 198 ஆவணங்கள் பட்டியலிடப்பட்டன. சி.பி.ஐ. தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் அலெக்ஸாண்டர் லெனின் ராஜா, மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் சி.எஸ்.எஸ்.பிள்ளை, மாருதி ராஜ் ஆகியோர் ஆஜராகினர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சி.பி.ஐ.யில் டி.எஸ்.பி. பதவியை வகித்ததாக கூறி குற்றம் சாட்டப்பட்ட இருவரும் ஆதாயம் பெற்று மோசடியில் ஈடுபட்டனர் என்பதற்கான ஒரு சான்று ஆவணங்களும் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்படவில்லை. வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்பட்ட காலத்தில், 3.07 சதவீதம் மட்டுமே அவர்களது வருவாய் ஆதாரங்களில் இருந்து கூடுதலாக பெற்றுள்ளனர். இது, மிகவும் குறைவு. அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை அரசு இடமின்றி நிரூபிக்காததால் இருவரும் விடுதலை செய்யப்படுகின்றனர் என்று தீர்ப்பளித்தார்.
The post வருமானத்தைவிட அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு மத்திய கலால்துறை அதிகாரி, மனைவி விடுதலை: சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.