தாமிரபரணி ஆறு ஓடும் பகுதிகளில் உள்ள குளங்களில் தரமான கரம்பை மண் கிடைப்பதால் இந்த மண்ணில் தயாராகும் மண் பானைகள் முதல் தரமானதாக உள்ளன. இதில் சமைக்கும் உணவும் சரியான பதத்தில் வெந்து சுவை கூடுகிறது. தண்ணீர் பாட்டில், பிரியாணி சட்டி என இங்கு பலவகையான சமையல் பொருட்கள் மற்றும் பயன்படு பொருட்கள் மண்ணில் நேர்த்தியாகச் செய்யப்படுகின்றன. இவற்றிற்கு உள்ளூரில் மட்டுமன்றி, வெளிநாடுகளிலும் மவுசு அதிகரித்துள்ளது.சவுதி அரேபியா, துபாய் உட்பட பனிரெண்டு வளைகுடா நாடுகளுக்கு இவை ஏற்றுமதியாகின்றன. மண் பானைகளை வாங்குவதற்கான எளிய வழிமுறைகள் என்ன’ என்பது குறித்து அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த பெண்களிடம் கேட்டதற்கு, “பானைகளை வாங்கும்போது அதன் சுற்றுப் பகுதிகளில் மூன்று, நான்கு இடங்களில் விரல்களால் சுண்டிப் பார்க்கணும். தரமான மண்பானையாக இருந்தால் சுண்டும்போது எல்லா இடத்திலும் ஒரே மாதிரியான சத்தம் கிடைக்கும். பானையில் லேசான கீறல் இருந்தால் சத்தத்தில் மாற்றம் இருக்கும். அதை வைத்தே கண்டுபிடிக்கலாம்” என்றார்கள்.
-ஜெய
The post தமிழ் மண்ணின் பெருமை பேசும் மண்பாண்டங்கள்! appeared first on Dinakaran.