தமிழ்நாடு காவல்துறையில் தீயணைப்புத்துறை டிஜிபியாகவும் பணியாற்றினர். தற்போது மின்வாரிய விஜிலென்ஸ் இயக்குநராக பணியாற்றி வந்தார். மூத்த டிஜிபியான பிரஜ் கிஷோர் ரவி, தமிழ்நாடு டிஜிபி பதவிக்கான பட்டியலில் 2வது இடத்தில் இருந்தார். இவரது பணிக்காலம் வரும் டிசம்பர் மாதம் முடியவுள்ள நிலையில், டிஜிபி பிரஜ் கிஷோர் ரவி தனது விருப்ப ஓய்வுக்கான கடிதத்தை தமிழ்நாடு உள்துறை செயலாளர் அமுதாவிடம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. விருப்ப ஓய்வு பெற்ற டிஜிபி பிரஜ் கிஷோர் ரவி, தேசிய கட்சியில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்காகவே இவர் விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.
The post தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக தகவல் மின் வாரிய விஜிலென்ஸ் டிஜிபி பிரஜ்கிஷோர் ரவி விருப்ப ஓய்வு appeared first on Dinakaran.