சிறுவனுக்கு காய்ச்சல், தொண்டை வலி, டைபாய்டு மற்றும் மஞ்சள் காமாலை உள்ளிட்ட பல்வேறு நோய்கள் இருந்ததாக கூறப்படுகிறது. சென்னீர்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முழுமையான சுகாதார வசதி செய்யாததால், ஆங்காங்கே குப்பை, சாக்கடை தேங்கி நிற்கிறது. இதனால், கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி சிறுவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் சென்னீர்குப்பம் பகுதியில் வேறு யாருக்காவது காய்ச்சல் அறிகுறி உள்ளதா என மருத்துவர் குழுவினர் முகாமிட்டு தீவிர பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
The post பூந்தமல்லி அருகே சோகம் மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலி: மருத்துவர் குழு தீவிர பரிசோதனை appeared first on Dinakaran.