அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சம்பவம் நடந்ததாக கூறப்படுவது 2022 டிசம்பர். ஆனால் 2023 மார்ச் மாதம்தான் புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் மனுதாரரிடம் விசாரணை நடத்துவது அவசியம் என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கில் இறுதி அறிக்கை இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை என்பதால் போலீஸ் விசாரணை தேவைப்படுகிறது. திரைமறைவில் இருந்து கொண்டு தாம் ஒரு அப்பாவி என்று மனுதாரர் கூற முடியாது. எனவே, முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இதுபோன்ற போக்சோ வழக்குகளில் தாய், தந்தை, உறவினர்களின் நலனை விட பாதிக்கப்பட்ட குழந்தையின் நலனும், அந்த குழந்தையின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டியதும் முக்கியமாகும் என்று நீதிபதி தெரிவித்தார்.
The post போக்சோ வழக்குகளில் பெற்றோர், உறவினர் நலனைவிட பாதிக்கப்பட்ட குழந்தையின் நலனே முக்கியம்: தாய்மாமன் பாலியல் சீண்டல் வழக்கில் ஐகோர்ட் கருத்து appeared first on Dinakaran.