சென்னையில் பல இடங்களில் லைட் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த திட்டம்

சென்னை: சென்னையில் பல இடங்களில் லைட் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. சுரங்கப்பாதை, உயார்மட்ட பாதை இன்றி சாலையிலேயே செல்லும் வகையில் லைட் மெட்ரோ அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சாலையோரம் அல்லது மையப் பகுதியில் தண்டவாளம் அமைத்து மணிக்கு ரயில் 30 கி.மீ. வேகத்தில் செல்லும் வகையில் லைட் மெட்ரோ அமைக்கபப்டும் என தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் அண்ணா நகர், தியாகராயர் நகர் போன்ற இடங்களில் லைட் மெட்ரோ அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டுள்ளனர். பொது போக்குவரத்து பயன்பாடு, வாகன நிறுத்தி வசதி உட்பட 10க்கும் மேற்பட்ட ஆய்வுகளை மேற்கொள்ளும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. லைட் மெட்ரோ தொடர்பாக 2.50 லட்சம் பேரிடம் நேரடியாக கருத்து கேட்க ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக அரசனது சென்னை மாநகரின் ஒரு போக்குவரத்து திட்டத்தை தயார் செய்யும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றது. சென்னைக்கான போக்குவரத்து திட்டத்தை தயார் செய்ய சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் அதாவது சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதற்கான திட்டத்தை தயார் செய்ய ஒரு தனியார் அமைப்புக்கு டெண்டர் அளிக்கப்பட்டுள்ளது. அந்த டெண்டர் தொடர்பான ஆய்வு கூட்டத்தில் தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை குழுமம் கருத்துக்களை வழங்கி வருகின்றது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் சென்னையில் லைட் மெட்ரோ அமைக்க சாத்தியம் உள்ள இடங்களில் ஆய்வு நடத்த வேண்டும் என்று அந்த தனியார் ஆலோசகர்களுக்கு சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த லைட் மெட்ரோ வானது சென்னையில் மிகவும் குறுகிய பகுதிகளில் மக்கள் அதிக அளவில் உள்ள பகுதிகளிலும், சென்னையில் முக்கிய தெருக்கள் இணைக்கும் வகையில் இந்த லைட் மெட்ரோ அமைக்கப்படுகின்றது. அதாவது தற்போது சென்னையில் அண்ணா சாலையில் மெட்ரோ ரயில் திட்டமானது செயல்பட்டு வருகின்றது.

இந்த அண்ணா சாலைக்கு மிக அருகில் உள்ள பகுதிகளை அண்ணா சாலை இணைக்கும் வகையில் இந்த லைட் மெட்ரோ திட்டமானது செயல்படுத்தப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையத்தை பொறுத்தவரையில் மெட்ரோ ரயில்களின் செலவு அதிகமாகும் என்பதால் இந்த லைட் மெட்ரோ திட்டமானது மிகவும் குறைவான செலவில் அமைக்கப்படவுள்ளது.மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் செல்லும் வகையில் சாலையின் நடுவில் அல்லது சாலையின் ஓரத்திலே மின்சாரம் மூலம் இயங்கும் ரயில் பெட்டிகளை கொண்டு இந்த லைட் மெட்ரோ திட்டமானது அமைக்கப்படவுள்ளது.

இந்த மெட்ரோ திட்டம் தொடர்பாக 10க்கும் மேற்பட்ட ஆய்வுகளை சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் சம்மந்தப்பட்ட ஆலோசனை நிறுவனம் துவங்கியுள்ளது. சென்னையில் ஆங்காங்கே கேமரா வைத்து போக்குவரத்து சர்வே சென்னையில் மக்களின் பயன்பாடு பொது போக்குவரத்து சென்னையில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறார்கள் என்பது தொடர்பான 10க்கும் மேற்பட்ட ஆய்வுகளை சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் மேற்கொண்டு வருகின்றது. விரைவில் பொதுமக்களிடம் ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

The post சென்னையில் பல இடங்களில் லைட் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: