தேங்கிய மழைநீரில் நடந்துதான் மாணவர்கள் பள்ளிக்கு வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கிய மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், பெரியபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள், பல்வேறு போட்டிகளில் சிறந்து விளங்குகிறார்கள். இதனால் பள்ளி வளாகத்தை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பார்கள். இந்நிலையில் மழை காலங்களில் அதிகளவு மழை பெய்தால், பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. அவ்வாறு தேங்கும் மழைநீர் வெளியேறுவதற்கு வழியில்லை. எனவே மழை காலங்களில் மழை நீரை வெளியேற்ற வழிவகை செய்ய வேண்டும். தற்போது பள்ளி வளாகத்தில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினர்.
The post பெரியபாளையம் பகுதியில் கன மழை பள்ளி வளாகத்தில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீர்: மாணவ மாணவிகள் அவதி appeared first on Dinakaran.