தர்மேந்திர பிரதானின் கருத்துகளை ஏற்று கொள்ள முடியாது என்றும் தமிழர்களின் சுயமரியாதையை அவமதிக்கும் நோக்கில் அவர் பேசியுள்ளார். நாட்டு மக்களை பிளவுபடுத்துவது பற்றியும் நாட்டைத் துண்டாக்குவது பற்றியும் பேசுவதாக கார்கே குற்றச்சாட்டு வைத்தார். மேலும், தமிழ்நாட்டு மக்களின் சுயமரியாதையை அவமதிக்கும் வகையில் பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்.பிரதானின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ் மக்களின் கண்ணியம் மற்றும் உரிமைகளை அப்பட்டமாக புறக்கணித்துள்ளனர் என்றும் குற்றசாட்டு வைத்தார்.
The post தமிழ்நாட்டு மக்களின் சுயமரியாதையை அவமதிக்கும் வகையில் பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தல் appeared first on Dinakaran.