எத்தனைப் பெண்கள் புகார் அளித்தால் கூட ஆபத்து உண்டாகுமோ என தனக்கு நடக்கும் கொடுமைகளைச் சொல்லாமல் இருக்கிறார்கள். இது ஒரு மாநிலத்தில் வந்த புகார்கள் கூட அல்ல, ஒரு நகரத்தில் பதியப்பட்ட புகார் எனில் இந்தியாவின் மாநிலங்கள், தொலைதொடர்பு சேவைகளே இல்லாத மலைக்கிராமங்கள், பழங்குடியினப் பெண்கள் நிலை எல்லாம் என்ன என்னும் கேள்வி தற்போது எழுந்துள்ளது. 181 என்பது நாடு முழுக்கவே பெண்களுக்காக இயங்கும் ஒரே அவசர அழைப்பு எண். உங்கள் மாநிலம் மற்றும் நகரம் எதுவோ எங்கே இருந்து நீங்கள் புகார் செய்கிறீர்களோ அந்த குறிப்பிட்ட பகுதி காவல் ஆணையர் அலுவலகத்திற்கு உங்கள் அழைப்புகள் செல்லும். எந்த உதவியானாலும், புகார்கள் எனினும், மேலும் ஏதேனும் ஆபத்துகள் என்றாலும் கூட இந்த எண்ணுக்கு அழைத்து உதவி பெறலாம். மேலும் மொபைலில் அழைப்பிற்கான பணமோ, அல்லது கட்டணமோ கூட இல்லை என்றாலும் இந்த 181 எண்ணுக்கு அழைப்புகள் செல்லும்.
The post பெண்கள் ஆணையத்திற்கு வந்த 6.30 லட்சம் புகார்கள்! appeared first on Dinakaran.