நோயாளிகளை கனிவுடன் கவனித்து நலம்பெற சேவையாற்றும் செவிலியர்கள் அனைவர்க்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!

சென்னை: உலக செவிலியர் தினத்தை ஒட்டி அனைத்து செவிலியர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அன்பும் அரவணைப்பும் சேர்த்து நோயாளிகளைக் கனிவுடன் கவனித்து அவர்கள் நலம்பெற சேவையாற்றும் செவிலியர் அனைவர்க்கும் உலக செவிலியர் தினம் வாழ்த்துகள். காயமாற்றும் அவர்களது வாழ்வில் ஒளியேற்றிட நமது அரசு தொடர்ந்து செயலாற்றிடும் என குறிப்பிட்டுள்ளார்.

The post நோயாளிகளை கனிவுடன் கவனித்து நலம்பெற சேவையாற்றும் செவிலியர்கள் அனைவர்க்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Related Stories: