பரந்தூர் விமான நிலையத்திற்கு கையகப்படுத்திய நிலங்களுக்கு மாநில அரசே இழப்பீடு தர வேண்டும் : ஒன்றிய அரசு

டெல்லி : பரந்தூர் விமான நிலையத்திற்கு கையகப்படுத்திய நிலங்களுக்கு மாநில அரசே இழப்பீடு தர வேண்டும் என்று ஒன்றிய அரசு கூறியுள்ளது. பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக பெரம்பலூர் எம்.பி.
பாரிவேந்தர் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு இவ்வாறு பதில் அளித்துள்ளது. பரந்தூர் விவசாயிகள் பாதிக்கப்படுவதால் விமான நிலையத்தை வேறு இடத்தில் அமைக்க பாரிவேந்தர் கோரிக்கை வைத்தார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, நிலத்தை அடையாளம் கண்டு கையகப்படுத்துவது மாநில அரசின் பொறுப்பு என்றும் மாநில அரசு அடையாளம் காணும் இடங்கள் சரியாக உள்ளதா என்பதை மட்டுமே மத்திய அரசு ஆய்வு செய்யும் என்றும் தெரிவித்தார்.

The post பரந்தூர் விமான நிலையத்திற்கு கையகப்படுத்திய நிலங்களுக்கு மாநில அரசே இழப்பீடு தர வேண்டும் : ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Related Stories: