ஆனால் சமீபத்திய மழையால் இலைச்சுருட்டுப் புழு தாக்குதல் நெற்பயிரில் அதிகமாக காணப்படுகிறது. இதனால் அச்சமடைந்திருக்கும் விவசாயிகள் உடனடியாக அதனை கட்டுப்படுத்தாவிட்டால் 50 முதல் 90 விழுக்காடு மகசூல் இழப்பு ஏற்படும் என கவலை தெரிவிக்கின்றனர். வேளாண்துறை அதிகாரிகள் இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் மானிய விலையில் மருந்துகள் வழங்கி பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.
The post காட்டுமன்னார்கோவில் சுற்றுவட்டார கிராமங்களில் நெல் சாகுபடி: நெற்பயிரில் இலைச்சுருட்டுப் புழு தாக்குதலால் விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.