×

உறுப்பு தானம் செய்தவர் உடலுக்கு கோட்டாட்சியர் அரசு மரியாதை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி, கரையான் சாவடி முருகேசன் தெருவில் வசித்த வந்தவர் துரைமுருகன் பாபு(37). இவருக்கு மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர் ஹூண்டாய் கம்பெனியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார். இவர் வீட்டின் 2வது மாடியில் இருந்து கால் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவர் உடனடியாக போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தாக மருத்துவர்கள் அறிவித்தனர். அதன் பேரில் இறந்த துரைமுருகன் பாபுவின் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அவரது குடும்பத்தினர் அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. பிறகு இறுதி சடங்கிற்காக கரையான்சாவடி, முருகேசன் தெருவில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் தியாகத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன் பேரில் அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தும் விதமாக திருவள்ளூர், கோட்டாட்சியர் ஏ.கற்பகம், பூந்தமல்லி வட்டாட்சியர் ரா.கோவிந்தராஜ் ஆகியோர் நேரில் சென்று தமிழ்நாடு அரசின் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியின்போது வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் உறவினர்கள் உடனிருந்தனர்.

The post உறுப்பு தானம் செய்தவர் உடலுக்கு கோட்டாட்சியர் அரசு மரியாதை appeared first on Dinakaran.

Tags : Kottakshi government ,Thiruvallur ,Thiruvallur District ,Poontamalli ,Karayan Savadi Murugesan Street ,Vanda Duraimurugan Babu ,Hyundai Company ,Kotakshiar Government ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம்...