The post குட்டிக்கரணம் அடித்து சாலையில் கவிழ்ந்த கார் ஒருவர் பலி appeared first on Dinakaran.
குட்டிக்கரணம் அடித்து சாலையில் கவிழ்ந்த கார் ஒருவர் பலி

பரமத்திவேலூர்: நாமக்கல் தில்லைபுரம் காமராஜர் நகரை சேர்ந்தவர் ஞானசேகரன்(63). இவர், கீரம்பூர் சுங்கச்சாவடி அருகே குஞ்சாம்பாளையத்தில் வசிக்கும் மகன் கோபியை பார்க்க, நேற்று காலை டூவீலரில் புறப்பட்டார். கீரம்பூர் சுங்கச்சாவடி பகுதியில் டூவீலரை நிறுத்தி இயற்கை உபாதையை கழித்துள்ளார். அப்போது, கரூரிலிருந்து சேலம் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து தறி கெட்டு ஓடி ஞானசேகரன் மீது மோதி குட்டிக்கரணம் அடித்து, மூன்று சுற்றுகள் உருண்டு தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் ஞானசேகரன் உயிரிழந்தார். காரில் வந்த 3 பேர் படுகாயமடைந்தனர்.