ஆனால் பாஜ இந்தியாவுக்கு விரோதியை போல நடந்து கொள்கிறது. 7 தொகுதி இடைத்தேர்தலில் பாஜவுக்கு எதிராக அந்தந்த மாநில பிராந்திய கட்சி வெற்றி பெற்றுள்ளது. பாஜவை தேர்தலில் தோற்கடிக்க முடியாது என்ற நினைப்பு அகற்றப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான அரசியல் சாசன திருத்தத்தை அவ்வளவு எளிதில் செய்ய முடியாது. அரசியல் சாசனத்தில் குறைந்தபட்சம் ஐந்து திருத்தங்களை செய்ய வேண்டும். அதை செய்ய முடியும் என தோன்றவில்லை. மாநில அரசுகளை பலவீனப்படுத்த ஒரே நாடு, ஒரே தேர்தலை கொண்டு வர நினைக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
The post ஒரே நாடு, ஒரே தேர்தல் அரசியல் சாசன திருத்தங்களை எளிதில் செய்ய முடியாது: ப.சிதம்பரம் கருத்து appeared first on Dinakaran.