இதையடுத்து, 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் பால்பிர்னி 11 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினார். பின்னர் இணைந்த பால் ஸ்டிர்லிங்-கர்டிஸ் கேம்பர் ஜோடி சிறப்பாக ஆடி, இருவரும் அரை சதமடித்து அசத்தினர். பால் ஸ்டிர்லிங் 89, கர்டிஸ் கேம்பர் 63 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில், அயர்லாந்து அணி 48.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 249 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (18-ம் தேதி) நடைபெறுகிறது.
The post 2வது ஒரு நாள் போட்டி: ஜிம்பாப்வேயை வீழ்த்தி அயர்லாந்து வெற்றி appeared first on Dinakaran.