ஒடிசா ரயில் விபத்தில் உயிர் இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காணுவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வரும் நிலையில் மரபணு சோதனை மூலம் கண்டறிய முடிவு

ஒடிசா: ஒடிசா ரயில் விபத்தில் உயிர் இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காணுவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வரும் நிலையில் மரபணு சோதனை மூலம் கண்டறிய முடிவு செய்துள்ளது அம்மாநில அரசு, ஒடிசா மாநிலத்தில் மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் 275 பேர் உயிர் இழந்தனர், உருக்குலைந்து கிடந்த பேட்டிகளில் உள்ளேயும் மற்றும் வெளியேயும் உடல்கள் சிதறிக்கிடந்தன படுகாயம் அடைந்தவர்களின் அபாய குரல் கேட்போரை பதைபதைக்க செய்தன இரண்டு நாட்களாக இறந்த உடல்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்தாலும் பல உடல்கள் அடையாளம் தெரியாதபடி சிதைந்து கிடந்தன, உடல்களை ஒரே மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத அவலம் புவனேஸ்வரிலுள்ள வெவ்வேறு மருத்துவமனைகளில் உடல்களை குவிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்த தான் அன்புக்கு இனியவர்களை முகத்தை இறுதியாக ஒரு முறை பார்த்துவிட மாட்டோமா என்ற ஏக்கத்தில் உடலை தேடி வந்த உறவினர்கள் எந்த மருத்துவமனையில் இறந்தவர்களின் சடலம் வைக்கப்பட்டுள்ளது என தெரியாமல் தவித்து வருகின்றனர். இதற்காக ஒடிசா அரசு உதவி மையங்கள் ஏற்பாடு செய்துள்ள நிலையிலும் உறவினர்களின் தேடல் தொடர்கதையாக இருந்து வருகின்றது. தாங்க முடியாத சோகத்தை சுமந்து கொண்டிருக்கும் உறவினர்கள் மறுப்பக்கம் இறந்தவர்களின் உடலை அடையாளம் காணமுடியாமல் தவித்து வருகின்றனர்.

இதன் விளைவாக ஒரு உடலுக்கு பலர் சொந்தம் கொண்டாடும் அவலம் அரங்கேறி வருகின்றது. இந்த பிரச்சனையை அம்மாநில அரசு எப்படி அணுகப்போகிராது என்று எதிர்பார்த்த வேளையில் மரபணு பரிசோதனையின் கீழ் உடல்களை ஒப்படைப்போம் என தெரிவித்துள்ளனர். ஏற்கனவே துக்கத்தை சுமந்த நெஞ்சங்கள் இந்த துயரத்தையும் சேர்த்து சுமக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது தான் வேதனையின் உச்சம்.

The post ஒடிசா ரயில் விபத்தில் உயிர் இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காணுவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வரும் நிலையில் மரபணு சோதனை மூலம் கண்டறிய முடிவு appeared first on Dinakaran.

Related Stories: