இதனிடையே சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட 81 பேரின் சடலங்கள், அடையாளம் காணப்படாமல் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டன. ஒரு சடலத்திற்கு பல குடும்பங்கள் உரிமை கோரியதால், டிஎன்ஏ சோதனை மூலம் சடலங்களை அடையாளம் காண ரயில்வேயும், புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையும் முடிவு செய்தன.அதன்படி, முதல்கட்டமாக 103 பேருக்கு மரபணு சோதனை செய்ததில் 52 சடலங்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில், டெல்லியில் உள்ள மத்திய ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட இறுதிகட்ட DNA மாதிரிகளின் முடிவுகள் விரைவில் வந்துவிடும். அதன் அடிப்படையில் சில உடல்கள் அடையாளம் காணப்பட்டு ஒப்படைக்கப்படும்; உரிமை கோராமல் மீதமிருக்கும், உடல்களை தகனம் செய்வது குறித்து மாநில அரசே முடிவெடுக்கும்
The post நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து.. 2 மாதங்கள் ஆகியும் அடையாளம் காணப்படாத 29 பேரின் சடலங்கள்!! appeared first on Dinakaran.