இத்தகைய அநீதி இந்தி அல்லா மாணவர்களின் வாய்ப்புகளை கடுமையாக பாதிக்கக் கூடியது, இந்தித் திணிப்பை கைவிட வேண்டுமென்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு கடந்த 23ம் தேதி கடிதம் எழுதி இருந்தேன். தற்போது கடிதத்திற்கு தீர்வு கிடைத்துள்ளது. அதாவது தேர்வு பற்றிய புதிய அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்தி கட்டாயம் அல்ல ஆங்கிலம் அல்லது இந்தியில் எழுதிக் கொள்ளலாம் என்று மாற்றப்பட்டு உள்ளது. இது தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் இந்தி பேசாத அனைத்து மாநில மாணவர்களுக்கும் கிடைத்த வெற்றியாகும். மொழிப் பன்மைத்துவத்தை பாதுகாப்பதிலும், இந்தித் திணிப்பை தடுத்து நிறுத்துவதிலும் எப்போதும் முன்னிற்போம்” என்று கூறியுள்ளார்.
The post என்.ஐ.டி நியமன தேர்வுகளில் இந்தி மொழித் தேர்வு கட்டாயமில்லை என அறிவிப்பு.. இந்தி திணிப்பிற்கு எதிரான வெற்றி என மதுரை எம்.பி.சு. வெங்கடேசன் நெகிழ்ச்சி!! appeared first on Dinakaran.