இறந்த புலிக்குட்டிகளின் தாயை கண்டுபிடிக்க 10க்கும் மேற்பட்ட இடங்களில் நவீன கேமரா பொருத்தப்பட்டு தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். தாய் புலியை அடையாளம் காண அப்பகுதியில் கிடைத்த புலியின் எச்சம், வேட்டையாடிய கடமானின் மாமிசங்கள் ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் முடிவுகள் வந்த பிறகே தாய் புலி குறித்து தெரியவரும் என்றும் வெங்கடேஷ் கூறினார். இந்த நிலையில் புலிகள் இறப்பதை தடுக்க தமிழக அரசு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என சுற்றுசூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே தாய் புலியை கண்டுபிடிக்கும் பணியை வனத்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.
The post நீலகிரி வனத்தில் புலிகள் தொடர்ந்து இறப்பதற்கு காரணம் என்ன ? :தாய் புலியை கண்டுபிடிக்கும் பணியில் வனத்துறை தீவிரம்!! appeared first on Dinakaran.