நைஜீரியாவின் வடகிழக்கில் உள்ள கரீம் லாமிடோ மாவட்டத்தில் ஆற்றில் இருந்து மயோ ரனேவா கிராமத்துக்கு படகு ஒன்று சென்றது. இதில் குழந்தைகள், வணிகர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அதிகம் பேர் பயணம் செய்ததால் படகு ஆற்றில் கவிழ்ந்தது. அதிலிருந்தவர்கள் தண்ணீரில் தத்தளித்தனர். மீட்புப் படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 18 பேர் பலியானார்கள். 14 பேரை மீட்டனர். 70க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர்.
The post நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து 18 பயணிகள் பரிதாப உயிரிழப்பு; 70க்கும் மேற்பட்டோர் மாயம்..!! appeared first on Dinakaran.