×

பெண் சிசு கிணற்றில் வீசி கொலை போலீஸ் விசாரணை ஜவ்வாதுமலையில் பிறந்து சில மணி நேரமே ஆன

போளூர், அக்.28: ஜவ்வாதுமலையில் பிறந்து சில மணி நேரமே ஆன நிலையில், பெண் சிசு கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை ஜமுனாமரத்தூர் அருகே உள்ள கோமுட்டேரி மலை கிராமத்தில் குடிநீர் கிணறு உள்ளது. நேற்று காலை அவ்வழியாக சென்ற மக்கள், கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதை கவனித்து எட்டி பார்த்தனர். அப்போது, பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசு சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து விஏஓ அ.சேட்டுக்கு தகவல் தெரிவித்தனர். விஏஓ போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், ஜமுனாமரத்தூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சிசுவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ச.சரவணன், ம.முருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து, பிறந்து சில மணி நேரமே ஆன நிலையில் பெண் சிசுவை கிணற்றில் வீசி கொலை செய்த கொடூர தாய் யார்? கள்ளக்காதலில் பிறந்ததால் வீசி கொலை செய்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் வீசி பச்சிளம் குழந்தை கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : police investigation ,baby girl ,murder ,well ,
× RELATED மேலூரில் டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு: போலீசார் விசாரணை