×

தென்காசி மாவட்டத்தில் மனுநீதி நாள் கூட்டங்கள் ஒத்திவைப்பு

தென்காசி, மார்ச் 18: தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கொரோனா வைரஸ் நோய் தொற்றை தவிர்க்க உலகளாவிய பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. தமிழக முதல்வரின் செய்தி வெளியீட்டில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவுவதை தவிர்க்க பல்வேறு அறிவுரைகள் கூறப்பட்டுள்ளன. மேலும் தென்காசி மாவட்டத்தில் எனது தலைமையில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சி தலைவர்களின் மனுநீதி நாள் கூட்டங்களில் அதிகப்படியான மக்கள் கலந்து கொள்வதால் இந்த கூட்டங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு இம்மாதம் 31ம் தேதி வரை அனைத்து கூட்டங்களும் ஒத்திவைக்கப்படுகிறது. மேலும் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அருகில் உள்ள இ சேவை (கூட்டுறவு சொசைட்டி, மகளிர் திட்டம், பொது இ-சேவை மையம்) மையங்களிலேயே பதிவேற்றம் செய்து எனது கவனத்திற்கு எடுத்துக்கூறலாம்.

Tags : Meetings ,Tenkasi District ,
× RELATED திருவேங்கடம் அருகே நேற்றிரவு...