×

ஏற்காட்டில் தொழிற்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்

ஏற்காடு, மார்ச் 16: ஏற்காட்டில், மின்வாரிய டாக்டர் அம்பேத்கர் தொழிற்சங்கத்தின் 20 வது  ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைப்பெற்றது.
சங்கத்தின் மாநில தலைவர் ஆதிதிராவிடர்  தலைமை வகித்தார். சேலம் மாவட்ட செயலாளர் முரளி வரவேற்றார்.  ஈரோடு மண்டல செயலாளர் துரைசாமி முன்னிலை வகித்தார். மாநில பொதுச்செயலாளர்  சாமி, அம்பேத்கர் புகைப்படத்தை திறந்து வைத்து பேசினார்.  

அனைத்து மின்வாரிய அலுவலகங்களிலும் அம்பேத்கர் புகைப்படங்கள் வைக்க  வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள  வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன. ஈரோடு திட்ட செயலாளர்  விஸ்வநாதன் நன்றி தெரிவித்தார். ஏற்காடு மின்வாரிய ஊழியர்கள் அங்கமுத்து,  பவுல், சிவா உள்ளிட்ட தமிழகத்தில் இருந்து 250க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர்.

Tags : meeting ,trade union ,Yercaud ,
× RELATED கடைகளுக்கு விடுமுறை அளித்து 100 சதவீதம்...