×

கொரோனா வைரஸ் பீதி புறநகரில் ரெஸ்டாரன்ட், ஓட்டல்களில் இயங்கிய பார்கள் மூடல்

சோமனூர், மார்ச்17:  சோமனூர் மற்றும் கருமத்தம்பட்டி பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் இடத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. கருமத்தம்பட்டி பேரூராட்சி மற்றும் சோமனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து சோமனூர் மற்றும் கருமத்தம்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதிகளில் கொரானா வைரஸ் தாக்கம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. நேற்று சோமனூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள இறைச்சி கூடங்கள், கடைகள் மற்றும் சாக்கடை பகுதிகளிலும் பிளீச்சிங் பவுடர், கிருமி நாசினி தெளித்து சுகாதார பணிகளை மேற்கொண்டனர். அரசு மருத்துவமனையின் சார்பில் வெளியூர்களில் இருந்து சோமனூர் வரக்கூடிய பயணிகளை நோய் பாதிப்பு உள்ளதா? என்று முழுமையாக ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் சோமனூர் கருமத்தம்பட்டி பகுதிகளிலுள்ள ரெஸ்டாரன்ட்கள் மற்றும் ஓட்டல்களில் இயங்கிய பார்களை தற்காலிகமாக  மூடியுள்ளனர்.

Tags : Closing ,cafes ,restaurants ,outskirts ,virus panic ,Corona ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப்...