×

குந்தாணிபாளையம் பள்ளி அருகில் செடி கொடி மண்டிய நீர்த்தேக்க தொட்டி

கரூர், மார்ச் 13: கரூர் அருகே உள்ள குந்தாணிபாளையம் ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. சுற்றிலும் ஏராளமான செடி கொடிகள் படர்ந்து பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. இதனால் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகமாகி விட்டது. மாணவ, மாணவியர் பள்ளிக்கு அச்சத்துடன் வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை என பெற்றோர் தெரிவித்தனர்.

Tags : Kundanipalayam School ,
× RELATED மாவட்டம் முழுவதும் 173.1 மிமீ பதிவு கரூரை குளிர்வித்த 2 மணி நேர மழை