×

துக்கம் விசாரிக்க சென்ற பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற கும்பல்

மேட்டூர், மார்ச் 13: கொளத்தூர் அருகே துக்கம் விசாரிக்க உறவினர் வீட்டுக்கு சென்ற பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக தொழிலாளி உட்பட 30 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். சங்ககிரி சத்யா நகரை சேர்ந்த பெருமாள் மனைவி மாரியம்மாள். இவர் நேற்று முன்தினம், கொளத்தூர் அருகே காவேரிபுரம் காலனியில் உள்ள உறவினர் வீட்டில் துக்கம் விசாரிக்க சென்றுள்ளார். அப்போது காவேரிபுரம் காலனியை சேர்ந்த பழனி மகன் அய்யண்ணன் மற்றும் 30 பேர், முன்விரோதம் காரணமாக மாரியம்மாளை மானபங்கப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாரியம்மாள், நேற்று கொளத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார், 30 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : gang ,
× RELATED புதுச்சேரியில் கோயில் ஊர்வலத்தில் பெயிண்டர் கொலை வழக்கு: போலீஸ் வலை