×

மணல் கடத்தலில் ஈடுபட்ட போலீஸ்காரர் உட்பட மூவர் மீது வழக்கு

நாங்குநேரி,  மார்ச் 13: மூன்றடைப்பு காவல் நிலையத்திற்குட்பட்ட  நெடுங்குளத்தை சேர்ந்தவர் அருணாசலம். இவர், நெல்லை மானூர் பகுதியில்  மதுவிலக்கு பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார். நெடுங்குளத்தில் அருணாசலம்  கட்டி வரும் புதிய வீட்டுக்காக அனுமதியின்றி டிராக்டரில்  மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள காட்டு ஓடையில் மணல் அள்ளியதாக  கூறப்படுகிறது. தகவலறிந்த மூலைக்கரைப்பட்டி போலீசார் அங்கு சென்று விசாரணை  நடத்தினர்.  அப்போது அருணாசலத்தின் தம்பி ஐயப்பன் மற்றும் ஆறுமுகம், போலீசாரிடம் சிக்கினர். இதையடுத்து வழக்கு பதிந்து மணல் கடத்தலுக்கு  பயன்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், ஐயப்பன் மற்றும்  ஆறுமுகத்தை கைது செய்தனர். மேலும் காவலர்  அருணாசலத்தை தேடி வருகின்றனர்.


Tags : policeman ,
× RELATED டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது...