×

கடையத்தில் 1000 பேருக்கு தென்னங்கன்றுகள் வழங்கல்

கடையம், மார்ச் 13:  கீழக்கடையம் உடையார் பிள்ளையார் கோயில் அருகே, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பிரபாகரன் தலைமை வகித்து ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் அதிமுக கொடியேற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். இதில் மாவட்ட பாசறை செயலாளர் சேர்மபாண்டி, ஒன்றிய செயலாளர் அருவேல்ராஜன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் புளிகணேசன், மாவட்ட மாணவரணி முருகேசன், ஆழ்வை நகர செயலாளர் சங்கர், பனைவெல்ல கூட்டுறவு சங்க தலைவர் வடிவேல் முருகன், ராமதுரை, மகாலிங்கம் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல் கடையத்தில் நடந்த ெஜயலலிதா பிறந்த நாள் விழாவிற்கு முன்னாள் எம்எல்ஏ பி.ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்து 1000 பேருக்கு தென்னங்கன்றுகளை வழங்கினார். இதில் கோவிந்தப்பேரி கூட்டுறவு சங்க தலைவர்  உச்சினிமாகாளி, ஊராட்சி செயலாளர் சவுந்திராஜன், மேட்டூர்  கூட்டுறவு சங்க தலைவர்  ராஜன், முன்னாள் கவுன்சிலர்கள் புளி கணேசன், ராசு, வெள்ளத்துரை, தங்க குமார்,  பனைவெல்ல கூட்டுறவு சங்க தலைவர் வடிவேல் முருகன்,  அருள், கிளை செயலாளர்கள் சுப்பிரமணியன், டேவிட்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : persons ,shop ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...