×

தென்காசி மாவட்டத்தில் நாளை அம்மா திட்ட முகாம்கள்

தென்காசி, மார்ச் 12: தென்காசி மாவட்டத்தில் நாளை (13ம் தேதி) அம்மா திட்ட முகாம்கள் நடைபெறும் இடங்கள்  அறிவிக்கப்பட்டு உள்ளன.  இதுகுறித்து தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ருவாய்த்துறை சார்பில் ஒரு கிராமத்தில் முகாமிட்டு மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வருவாய் வட்டத்திலும் மக்களை தேடி வருவாய்த்துறை மூலம் அம்மா திட்ட முகாம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டத்தில் நாளை (13ம் தேதி) சங்கரன்கோவில் தாலுகா கரிவலம்வந்தநல்லூர், திருவேங்கடம் தாலுகா நடுவப்பட்டி,  தென்காசி தாலுகா பாட்டப்பத்து மற்றும் மின்னடிச்சேரி,   வீரகேரளம்புதூர் தாலுகா மருக்காலன்குளம்,  ஆலங்குளம் தாலுகா  கீழப்பாவூர் பகுதி 2,  சிவகிரி தாலுகா அரியூர்,  கடையநல்லூர் தாலுகா பொய்கை ஆகிய இடங்களில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது. இதில் இலவச வீட்டுமனை பட்டாக்கள்,  முதியோர் உதவித்தொகை பரிசீலனை விண்ணப்பம் உட்பட சமூக பாதுகாப்பு திட்டங்கள், உழவர் பாதுகாப்பு அட்டைகள்,  நிலத்தாவாக்கள்,  சாலை வசதிகள்,  குடிநீர் வசதி உள்ளிட்ட சேவைகளுக்கு மனுக்கள் அளித்து பயன்பெறலாம். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : Amma ,project camps ,district ,Tenkasi ,
× RELATED சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி...