புதுச்சேரி, மார்ச் 12: புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு உணவு வழங்கும் திட்டத்துக்கு சிறப்பு கூறு நிதியிலிருந்து ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் ஒதுக்கப்படும் என அமைச்சர் கந்தசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சங்கம் சார்பில் கடந்த 2017ம் ஆண்டு முதல் கல்லூரியில் பயிலும் ஏழை மாணவிகள் 150 பேருக்கு காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கல்லூரிக்கு மதிய ஷிப்ட் வரும் 100 ஏழை மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்ட துவக்க விழா நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் சுப்ரமணி தலைமை தாங்கினார். சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி மதிய உணவு திட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது: இக்கல்லூரியில் பயிலும் 5 சதவீத ஏழை மாணவிகளுக்கு மட்டும் உணவு வழங்கப்படு|கிறது. உணவு விஷயத்தில் ஏழை, பணக்காரர் என்று பிரித்து பார்க்க கூடாது. இருப்பினும், கல்லூரியில் பணியாற்றும் முன்னாள் மாணவிகள் தங்களது சம்பளத்திலிருந்து இத்திட்டத்தை தொடங்கியுள்ளது பாராட்டுக்குரியது. புதுவையில் நிதி பிரச்னை உள்ளது.
இந்த சூழ்நிலையில், இக்கல்லூரியில் உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த சிறப்பு கூறு நிதியிலிருந்து ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் வழங்கப்படும். அனைத்து மாணவிகளுக்கு உணவு வழங்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. எனவே, வரும் பட்ஜெட் கூட்டத்தில் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கி அறிவிக்கப்படும். உணவு வழங்க நிதி ெகாடுப்பவர்களுக்கு மாணவிகள் செய்கிற நன்றி கடன் என்னவென்றால், நன்றாக படித்து நல்ல பணிக்கு சென்று ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும். மத்தியிலும், மாநிலத்தில் பல ஆயிரம் கோடி கடன் உள்ளது. வாழ்க்கையில் எதையும் கொண்டு வந்து, கொண்டு செல்ல போவதில்லை. நாம் சேர்த்து வைக்கின்ற பணம் எந்த பலனையும் தரபோவதில்லை. அந்த பணத்தை வைத்து ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவிகள் சங்க தலைவர் ரஜினி சனோலியன், செயலாளர் நோயலின், பொருளாளர் பரிமளா மற்றும் பேராசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும், இத்திட்டத்துக்கு நிதி திரட்டும் பொருட்டு கல்லூரி வளாகத்தில் ஒரு நாள் சந்தை நடத்தப்பட்டது.