×

பள்ளி மாணவி கடத்தல்?


விழுப்புரம், மார்ச் 28:  விழுப்புரம்  மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே அரும்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி திருவெண்ணெய்நல்லூர் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். கடந்த  25ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்று அவர் வீடு திரும்பவில்லை.  இதையடுத்து மாணவியின் பெற்றோர், உறவினர் மற்றும் தோழிகளின் வீடுகளில் தேடி  பார்த்தும் மாணவி கிடைக்கவில்லை. இது குறித்து விழுப்புரம் அனைத்து மகளிர் காவல்  நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் கண்ணராம்பட்டை சேர்ந்த அஜய்(23) என்பவர் தனது மகளை காதலிப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி கடத்திச் சென்றதாகவும், இதற்கு உடந்தையாக அவரது பெற்றோர் ஜெயா, சிவக்குமார் ஆகியோர் இருந்ததாகவும்  கூறியுள்ளார். இதுகுறித்து வாலிபர் உள்ளிட்ட மூன்று பேர் மீதும் போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...