×

விபத்தில் மூதாட்டி பலி

திண்டிவனம், மார்ச் 11: நெய்வேலி டவுன் வயர்மேன் தெருவை சேர்ந்த கோவிந்தராஜன் மனைவி கலைமணி(59). இவர் நேற்று முன்தினம் இரவு நெய்வேலியில் இருந்து மகளை பார்ப்பதற்காக காரில் காஞ்சிபுரம் சென்று கொண்டிருந்தார். காரை சிதம்பரத்தை சேர்ந்த அர்ஜுனன் மகன் சரவணன்(35) என்பவர் ஓட்டி சென்றார். அப்போது திண்டிவனம் அடுத்த மேல்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே  சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கலைமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஒலக்கூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Grandfather ,accident ,
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...