×

தடுப்பு சுவரில் கார் மோதல்- வாலிபர் பலி

தர்மபுரி, மார்ச் 5: தடுப்பு சுவரில் கார் மோதி வாலிபர் பலியானார். அவரது நண்பருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் எலத்தகிரி ஜோடுமுத்தூர் பகுதியை சேர்ந்தவர்  முத்தமிழ்செல்வன்(24). இவரது நண்பர் பாலாஜியுடன், நேற்று முன்தினம் கரூர் பெருமாள் கோயிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். தர்மபுரி  மாவட்டம் அதியமான்கோட்டையில் வந்த போது, தடுப்பு சுவரில் கார் மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் பலத்த காயமடைந்தனர். இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், முத்தமிழ் செல்வன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாலாஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து  அதியமான்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Car collision ,
× RELATED மின் கம்பத்தில் கார் மோதல் 2 பேர் கருகி பலி