×

மின் கம்பத்தில் கார் மோதல் 2 பேர் கருகி பலி

திருமலை: ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், கோகாவரத்தில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு 5 பேர் ஒரு காரில் சென்றனர். ஜக்கம்பேட்டை அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் உள்ள மின்கம்பத்தில் மோதியது. அப்போது, மின்கம்பத்தில் ஏற்பட்ட தீப்பொறி கார் மீது விழுந்து தீப்பிடித்து எரிந்தது. காரில் இருந்தவர்களை மீட்கும் பணியில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர். ஆனால், காரில் இருந்த 2 பேர் உடல் கருகி இறந்தனர். படுகாயம் அடைந்த மற்ற 3 பேர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.



Tags : car collision , 2 killed in car collision with electric pole
× RELATED கார் மோதி பெண் பலி