×

திருவில்லிபுத்தூர் அருகே கிணற்றில் மிதந்த மூதாட்டி பிணம்

திருவில்லிபுத்தூர், மார்ச் 5: திருவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்தில் வங்கி ஒன்றின் பின்புறம் ஒரு கிணறு உள்ளது. படி இல்லாத அந்தக் கிணற்றில் மூதாட்டி ஒருவரின் பிணம் மிதப்பதாக திருவில்லிபுத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு மம்சாபுரம் காவல்துறையினர் தகவல் கொடுத்தனர்.  திருவில்லிபுத்தூர் தீயணைப்புத்துறை நிலைய அதிகாரி ஜெயராஜ் தலைமையில் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று கயிறு கட்டி சுமார் ஒரு மணி நேரம் போராடி மிதந்து கிடந்த மூதாட்டி உடலை மீட்டனர்.

போலீசார் விசாரித்தபோது, கிணற்றில் இறந்து கிடந்தவர் மம்சாபுரம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சிதம்(75) எனத் தெரிய வந்தது.  இதனைத் தொடர்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு மம்சாபுரம் போலீசார் அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மூதாட்டி ரஞ்சிதம்  கிணற்றுக்குள் தவறி விழுந்தாரா அல்லது கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Tiruviliputhur ,
× RELATED பொதுமக்கள் அதிருப்தி திருவில்லிபுத்தூரில் பரவலாக மழை