×

பொதுமக்கள் அதிருப்தி திருவில்லிபுத்தூரில் பரவலாக மழை

திருவில்லிபுத்தூர், நவ. 5:தமிழகத்தில் மகா புயல் காரணமாக பல்வேறு இடங்களில் பலத்த மழையும், சில இடங்களில் சாரல் மழையும் பெய்து வருகிறது.இந்நிலையில்  திருவில்லிபுத்தூர் நகரில் நேற்று மாலை சுமார் இரண்டரை மணி நேரம் பரவலாக  மழை பெய்தது. இடி-மின்னலுடன் கூடிய இந்த மழையால் நகர் மக்கள் மகிழ்ச்சி  அடைந்துள்ளனர். நேற்று மாலை 7 மணி அளவில் பெய்ய தொடங்கிய மழை  ஒன்பதரை மணி வரை சுமார் இரண்டரை மணி நேரம் பெய்தது. இதனால் நகர் முழுதும்  குளிர்ந்த காற்று வீசியது. சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. காலையில் பெய்த மழையால் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் மற்றும் அலுவலக பணிகளுக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.நேற்று மாலை மட்டும் திருவில்லிபுத்தூரில் 49.6 மில்லி மீட்டர் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED சிவகாசியில் வாறுகாலில் குப்பைகளை அகற்ற கோரிக்கை