×

முதியவர் மீது தாக்குதல்

விருதுநகர், ஏப்.27: விருதுநகர் அருகே வீரச்செல்லையாபுரத்தை சேர்ந்தவர் முனியாண்டி(55). இவரது பிள்ளைகள் திருமணம் முடித்து சென்று விட்ட நிலையில் தனியாக வசித்து வருகிறார். இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் விஜயா என்பவருக்கும் இடப்பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் முனியாண்டி தெருவில் நடந்து சென்ற போது, விஜயாவின் மகன் கோகுல் என்பவர் முனியாண்டியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் காயமடைந்த முனியாண்டி விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரில் ஆமத்தூர் போலீசார் கோகுல் மீது வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர்.

The post முதியவர் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Muniandi ,Weerachellayapuram ,Vijaya ,Muniyandi ,
× RELATED விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி...