×

வெம்பக்கோட்டை அருகே பன்றிகளை திருடியதாக 4 பேர் மீது வழக்குப்பதிவு

ஏழாயிரம்பண்ணை, ஏப்.29: வெம்பக்கோட்டை அருகே பன்றிகளை திருடியதாக நான்கு பேர் மீது ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே எட்டக்காப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன்(30). இவர் அதே பகுதியில் தனியார் பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வருகிறார். மேலும் இவர் எட்டக்காப்பட்டி பகுதியில் தொழுவம் அமைத்து பன்றிகளை வளர்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 18ம் தேதி காலையில் தொழுவத்தில் சென்று பார்த்த போது பன்றிகள் மாயமானது தெரியவந்தது. இது சம்பந்தமாக அக்கம் பக்கத்தில் விசாரித்து வந்துள்ளார். இந்த நிலையில் பன்றிகளை திருடியது விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ்(21) மற்றும் அவரது நண்பர்கள் செண்பக பாண்டியன், ஹரிஷ் குமார், கலையரசன் என்பது தெரிய வந்தது. எனவே இது சம்பந்தமாக மாரியப்பன் ஆலங்குளம் போலீசில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post வெம்பக்கோட்டை அருகே பன்றிகளை திருடியதாக 4 பேர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Vembakkottai ,Ejayarampannai ,Alankulam police ,Mariyappan ,Etakkapatti ,Vembakottai ,Virudhunagar district ,Dinakaran ,
× RELATED வல்லம்பட்டி பகுதியில் புதர்மண்டி...