×

ருத்துறைப்பூண்டியில் காணாமல் போன லோடு ஆட்டோ வாகன சோதனையில் சிக்கியது

திருத்துறைப்பூண்டி, மார்ச் 5: திருத்துறைப்பூண்டி அருகே லோடு ஆட்டோவை திருடி நிறம் மாற்றி விற்க முயன்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மன்னை சாலையில் கடந்த ஆண்டு நவம்பர் 8ம்தேதி துறைக்குடி காளியம்மன் கோயில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லோடு ஆட்டோ காணாமல் போனது. இது குறித்து மன்னை சாலையை சேர்ந்த லோடு ஆட்டோ உரிமையாளர் ஷேக் அப்துல்லா (29) திருத்துறைப்பூண்டி போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து காணாமல்போன வாகனத்தை தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று காலை 10 மணிளவில் திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் அருகே இன்ஸ்பெக்டர் அன்பழகன், எஸ்ஐ ரூபாவதி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு லோடு ஆட்டோவை சோதனை மேற்கொண்டதில், வாய்மேடு அண்ணா பேட்டை, வடக்கு தெரு சிவலிங்கம் மகன் கலைச்செல்வன் (25), வாய்மேடு திருக்குவளை கட்டளை சந்திரமோகன் மகன் மாரிமுத்து(23) என்பதும், கடந்த ஆண்டு மன்னை சாலையில் நிறுத்தியிருந்த ஷேக்தாவுது என்பவரின் லோடு ஆட்டோவை திருடி, நிறத்தை மாற்றி திருவாரூரில் விற்க எடுத்து வந்ததும் தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags :
× RELATED திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில்...