×

மூணாறு அருகே பரிதாபம் சுற்றுலாவேன் பள்ளத்தில் கவிழ்ந்து வாலிபர் பலி

மூணாறு, மார்ச் 3: மூணாறு அருகே சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்து வாலிபர் பலியானார். 24 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.கேரள மாநிலம், மலப்புரம் அருகே குற்றிப்புரம் பகுதியில் இருந்து ஒரு சுற்றுலா வேனில், டிரைவர் உட்பட 17 பேர், 8 சிறுவர், சிறுமிகள் மூணாறில் உள்ள சுற்றுலாத்தலங்களை பார்வையிட வந்தனர். நேற்று காலை மூணாறு அருகே குண்டலை எஸ்டேட் சாண்டோஸ் காலனிக்கு அருகில் சென்று கொண்டிருந்த வேன், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்த்து விபத்துக்குள்ளானது.இதில் டிரைவர் சீட் அருகே அமர்ந்திருந்த குற்றிப்புரம் பகுதியை சேர்ந்த முபாரிஷ்(26) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பயணிகள் உட்பட 24 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் சம்பவம் அறிந்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மூணாறு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, காயம் அடைந்தவர்களை மீட்டு மூணாறு பொது மருத்துவமனை மற்றும் அடிமாலி தாலுகா மருத்துவமனை, கோலஞ்சேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான முபாரிஷ் உடல், மூணாறு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Tags : tourist ,ditch ,Munnar ,
× RELATED மூணாறு அருகே கள்ளச்சாராய ஊறல் அழிப்பு