×

எம்எல்ஏ முகம்மது அபுபக்கர் பேச்சு உடல்நிலை பாதிப்பால் அவதி விஷம் குடித்து முதியவர் தற்கொலை

திருத்துளைப்பூண்டி, மார்ச் 3: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆலத்தம்பாடி மெயின்ரோடு கரும்பியூர் தூண்டிக்காரன் கோவில் எதிரே வயல்காட்டில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் விஷமருந்தி இறந்து கிடந்தார். இவர் யார்? எந்த ஊர் என்பது குறித்து ஆலிவலம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா மருதூர் வடக்கு பகுதியை சேர்ந்த கணேசன் (70) என்பதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல் நலமில்லாமல் இருந்து வந்தததும், இதனால் மனமுடைந்த அவர் விஷமருந்தி தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து ஆலிவலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : Mohammed Abubakar ,
× RELATED திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில்...